Archives: ஏப்ரல் 2020

கடவுள் புரிந்துகொள்கிறார்

நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார் - சங்கீதம் 103: 14

ஆட்டோமொபைலின் ஆரம்ப நாட்களில், ஒரு மாடல்-டி ஃபோர்டு சாலையின் நடுவில் நின்றுவிட்டது. டிரைவர் எவ்வளவு சிரமப்பட்டாலும் அல்லது…

கடவுளின் அற்புதமான சக்தி

பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. சங்கீதம் 114: 7

முன்னும் பின்னுமாக, முன்னும் பின்னுமாக கடலின் துடிக்கும் அலைகள் செல்கின்றன. கடந்த காலங்களிலிருந்து,…

கடவுள் நம்மை வழிநடத்துகிறார்

தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்- சங்கீதம் 23:3

God has a purpose in everything that comes into your life

பிரிட்டிஷ் பாடலாசிரியர் வில்லியம்…

என்றென்றும் கருணை

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. - சங்கீதம் 136 : 1

எதுவும் என்றென்றும் நீடிக்காது என்பதை வலிமிகு தெளிவுபடுத்துவதற்கு முன்பு நீங்கள் இந்த…

உண்மையான விடுதலை

அமிஸ்டட் (Amistad) என்ற ஆங்கில படத்தில் வரும் கதையில், 1839 ஆம் ஆண்டு, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அடிமைகளை, வேறு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்த படகை, அந்த அடிமைகள் மேற்கொண்டனர், அந்த படகின் கேப்டனையும் வேறு சில நபர்களையும் கொன்றனர், ஆனால் உடனடியாக அவர்கள் பிடிபட்டனர், சிறையில் அடைக்கப் பட்டனர், பின்னர், விசாரணைக்கு கொண்டு செல்லப் பட்டனர், ஒரு மறக்க முடியாத நீதிமன்ற காட்சியில், அடிமைகளின் தலைவன், எப்படியாகிலும் தனக்கு விடுதலை தரும்படி, உணர்ச்சிவசத்தோடு கெஞ்சுகின்றான். மூன்று எளிய வார்த்தைகள், சங்கிலிகளால் கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாயிலிருந்து, உடைபட்ட ஆங்கில வார்த்தைகளாக திரும்பத் திரும்ப, மேலும் மேலும் வலிமையோடு வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அந்த நீதி மன்றமே அமைதியாக இருக்கின்றது, “எங்களுக்கு விடுதலை தாருங்கள்!” என்பதே அந்த வார்த்தைகள். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது, அந்த மனிதர்கள் விடுதலைப் பெற்றார்கள்.

இன்றைக்கு நம்மில் அநேகர் உடல் ரீதியாக கட்டப்பட்டவர்களாய் இல்லையெனினும், பாவத்தின் பிடியிலிருந்து ஆவியின் உண்மையான விடுதலையை இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. யோவான் 8:36ல் கூறப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் உண்மையான விடுதலையைக் கொடுக்கின்றது. “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” என்கின்றார். இயேசு தன்னை உண்மையான விடுதலையைக் கொடுப்பவராகச் சுட்டிக் காண்பிக்கின்றார், ஏனெனில் அவரை விசுவாசிக்கிற யாவருக்கும் அவர் உண்மையான மன்னிப்பை வழங்குகின்றார். கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட சிலர் விடுதலையைப் பெற விரும்பினாலும் (வச. 33), இயேசுவைக் குறித்த அவர்களின் வார்த்தையும், நடத்தையும், செயலும் அவர்களை விடுதலை பெற முடியாதவர்களாகச் செய்தது.

அந்த அடிமையின் வேண்டுதலை எதிரொலிக்கின்றவர்களின் வார்த்தையைக் கேட்க இயேசு ஆவலாய் இருக்கின்றார், நாமும் “எனக்கு விடுதலையைத் தாரும்!” என்று கேட்போமா? அவநம்பிக்கையினாலும், பயத்தினாலும் மற்றும் தோல்வியினாலும் விலங்கிடப்பட்டவர்களாய் இருக்கின்றவர்களின் கதறலை கேட்க, மனதுருக்கத்தோடு இயேசு காத்திருக்கின்றார். விடுதலை இருதயத்தில் ஏற்பட வேண்டும். நம்மை பாவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதை விசுவாசிக்கிறவர்களே, அவருடைய மரணம், உயிர்த்தெழுதலின் மூலம் விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அவரது உறுதியான பிரசன்னம்

அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். யாத்திராகமம் 33:14

முதன்முதலாக மருத்துவமனையில் தொங்கியதை என்னால் மறக்கமுடியாது
7 வயது…

உனக்கு மிக அருகிலேயே

ஒவ்வொரு நாளும், எருசலேமிலுள்ள ஒரு தபால் நிலையத்தில், விநியோகிக்க முடியாத, குவியலான கடிதங்களைப் பிரிப்பதில் வேலையாட்கள் ஈடுபட்டுள்ளனர். எப்படியாகிலும் அவற்றை அதனதன் பெறுநரிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகின்றனர். அநேகக் கடிதங்கள், “தேவனுக்கு கடிதங்கள்” என்ற பெட்டியை அடைகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான, இத்தகைய கடிதங்கள் வருகின்றன, அவற்றில் விலாசம் தேவனுக்கு அல்லது இயேசுவுக்கு என்றிருக்கும். இவற்றை என்ன செய்வது என்று அறியாது, திகைத்தனர், வேலையாட்கள் அவற்றை எடுத்துச் சென்று, எருசலேமின் மேற்குப் பக்க சுவரிலுள்ள கற்களுக்கு இடையேயுள்ள மற்ற கடிதங்களோடு வைத்தனர். அதிலுள்ள அநேகக் கடிதங்களில் வேலைக்காகவும், தனக்கு கணவன் அல்லது மனைவி கிடைக்க வேண்டும் எனவும் அல்லது நல்ல சுகத்திற்காகவும் வேண்டி, எழுதப் பட்டிருக்கும். சிலர் பாவமன்னிப்பை கேட்கின்றனர், வேறு சிலர் நன்றியைத் தெரிவிக்கின்றனர். ஒரு மனிதன், மரித்துப் போன தன்னுடைய மனைவி கனவில் வர வேண்டும், ஏனெனில் தான் அவளைப் பார்க்க ஏங்கிக் கொண்டிருப்பதாகக் கேட்கிறார். ஒவ்வொரு அனுப்புனரும், தங்களின் கடிதம் தேவனைச் சேர்ந்து விட்டால், தேவன் கவனிப்பார் என்று நம்புகின்றனர்.

இஸ்ரவேலர்கள் வனாந்திரத்தின் வழியே பயணம் செய்கையில் அநேகச் செய்திகளை கற்றுக் கொண்டனர். அவற்றில் ஒன்று, அவர்களின் தேவன் மற்ற தேவர்களைப் போல தூரத்தில் இருப்பவர் அல்ல, செவிடானவரும் அல்ல, ஒரே இடத்தில் தான் இருப்பார், நீண்டபயணம் செய்வதாலோ, அல்லது பன்னாட்டு மெயில் மூலமாகவோதான் அவரை அடையக் கூடும் என்பதாகவும் அல்ல, “நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுது கொள்ளுகிற போதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாய் இருக்கிறார்” (உபா. 4:7). இது ஒரு புரட்சிகரமான செய்தியல்லவா! மற்றவர்கள் இவ்வாறு கூற முடியுமா?

தேவன் எருசலேமில் மட்டும் வாழவில்லை, நாம் எங்கிருந்தாலும், அவர் நமக்கு மிக அருகிலேயே இருக்கிறார், சிலர் இந்த உண்மையை இன்னமும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர், அந்த கடிதங்கள் ஒவ்வொன்றிற்கும், “தேவன் உன்னருகில் தான் இருக்கிறார், அவரிடம் பேசு” என்று பதில் அனுப்பினால், அவர்களும் உண்மையைக் கண்டுபிடிக்கக் கூடுமே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.